ADDED : ஜன 25, 2026 04:27 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: சோலை நகரை சேர்ந்த விவேக், 30; அவரது உறவினரான தமிழக பகுதி பொம்மையார்பாளையத்தைச் சேர்ந்த கரிகாலன், 36; ஆகிய இருவரும் கடந்த 22ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கக் சென்றனர். மீன் பிடித்து கொண்டிருக்கும் போது, படகை கட்டுப்படுத்த முடியாமல் இருவரும் கடலில் விழுந்தனர்.
இருவரில் விவேக் மீட்டகப்பட்ட நிலையில், கரிகாலனை தேடும் பணியில் இரண்டு நாட்களாக கடலோர காவல் படையினர் மேற்கொண்டனர். நேற்று 3வது நாளாக தேடும் பணி நடந்தது.
