ADDED : ஜன 10, 2025 05:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: காரைக்கால் ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லுாரி மாணவிகள், விதை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் குறித்து, விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.
இறுதி ஆண்டு மாணவிகள், வில்லியனுார் அடுத்த கரிக்கலாம்பாக்கம் கிராமத்தில், மண் மாதிரிகளில் இருந்து நுால் புழுக்களை எவ்வாறு பிரித்து எடுப்பது, விதை உதிர்தல் மற்றும் நெல், நிலக்கடலை ஆகியவற்றில் எவ்வாறு, விதை சிகிச்சை செய்வது, என்பது குறித்து, செயல் விளக்கம் அளித்தனர்.
நிகழ்ச்சியில், மாணவிகள் அக் ஷயா, டெல்னா, ஹிருதிய திலககுமார், ஜெய்நிதா, ஸ்ரீ பிரியங்கா, தனுஷ்யா ,தனுஸ்ரீ, வம்சிகா, வென்சியா இவாஞ்சலின், யாம்னி உள்ளிட்டோர் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.

