
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரி வணிகவியல் துறை சார்பில் பிராந்திய முதலீட்டாளர்கள் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
கல்லுாரி முதல்வர் ராஜி சுகுமார் தலைமை தாங்கினார்.
செபி துணை மேலாளர் இளங்கோ சிறப்புரையாற்றினார். சிறப்பு அமர்வுகளில் மும்பை பங்கு சந்தை ஆலோசகர்கள் பத்ரிநாராயணன், சி.டி,. எஸ்.எல்., பிராந்திய தலைவர் கார்த்திக் ஆகியோர் முதலீடுகள் குறித்தும், பாதுகாப்பாக முதலீடு செய்வதும் குறித்தும் உரையாற்றினார்.
பங்கு சந்தை முதலீடுகள் குறித்து வணிகவியல் துறை மாணவிகள் எழுப்பிய சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர். வணிகவியல் துறை தலைவர் சிவக்குமார், பிற வணிகவியல் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.