ADDED : மார் 28, 2026 08:13 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரியில் 85 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் ஊனமுற்றோர் நேற்று இருப்பிடங்களிலிருந்து தபால் ஓட்டளித்தனர்.
புதுச்சேரி தேர்தல் துறை சார்பில், சட்டசபை தேர்தலுக்காக 85 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் உடல் ஊனமுற்றோர், தங்கள் வீடுகளில் இருந்து தபாலில் ஓட்டளிக்கும் பணி நேற்று துவங்கியது.
அதனையொட்டி, உப்பளம், உருளையன்பேட்டை தொகுதிகளின் தேர்தல் நடத்தம் அதிகாரி வினய்ராஜ், தேர்தல் துறை துணை தாசில்தார் சிவசுப்ரமணியன் ஆகியோர் தலைமையில் தேர்தல் அலுவலர்கள் முதியோர் மற்றும் ஊனமுற்றோர் வீடுகளுக்கு நேரில் சென்ற தபால் ஓட்டினை பெற்றனர்.
உப்பளம் தொகுதியில், 67 பேரும் உருளையன்பேட்டையில் 36 பேர் ஓட்டு போட்டனர்.
