sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மக்கள் மன்றம் நிகழ்ச்சி சீனியர் எஸ்.பி., பங்கேற்பு

/

மக்கள் மன்றம் நிகழ்ச்சி சீனியர் எஸ்.பி., பங்கேற்பு

மக்கள் மன்றம் நிகழ்ச்சி சீனியர் எஸ்.பி., பங்கேற்பு

மக்கள் மன்றம் நிகழ்ச்சி சீனியர் எஸ்.பி., பங்கேற்பு


ADDED : மார் 30, 2025 03:31 AM

Google News

ADDED : மார் 30, 2025 03:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடந்தது.

சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி முன்னிலை வகித்தனர்.

இதில், 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, சைபர் கிரைம் தொடர்பான புகார் மற்றும் குறைகளை தெரிவித்தனர். நிகழ்ச்சியில், புகார்தாரர் ஒருவர் இழந்த பணத்தை மீட்டுக் கொடுத்ததற்காக, சீனியர் எஸ்.பி.,க்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார்.

மேலும், சில புகார்தாரர்கள் மோசடி கும்பலிடம் இழந்த பணத்தை மீட்டுத்தர கோரிக்கை வைத்தனர். அதற்கு, சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா, சைபர் கிரைம் போலீசாரிடம் பொதுமக்கள் புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தர விட்டார்.

தொடர்ந்து, பொதுமக்கள் தவறவிட்ட ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 20 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், சைபர் குற்றங்களான போலியான உடனடி கடன் செயலி, ஆன்லைன் வர்த்தகம், மும்பை போலீஸ், சி.பி.ஐ., அதிகாரிகள் பேசுவதாக கூறி ஏமாற்றுவது, இணையதளத்தில் வரும் செய்திகளை உண்மை தன்மை அறியாமல் நம்ப வேண்டாம் என, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us