தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வாய்க்கால்களை துார்வார வேண்டும் செந்தில்குமார் எம்.எல்.ஏ., பேச்சு

வாய்க்கால்களை துார்வார வேண்டும் செந்தில்குமார் எம்.எல்.ஏ., பேச்சு

வாய்க்கால்களை துார்வார வேண்டும் செந்தில்குமார் எம்.எல்.ஏ., பேச்சு


ADDED : ஆக 29, 2026 10:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 29, 2026 10:41 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பட்ஜெட் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் செந்தில்குமார் எம்.எல்.ஏ., பேசியதாவது:

பாகூர் பகுதி இரண்டு முறை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. பாகூர் நகர் பகுதியில் செல்லும் வாய்க்கால்களை முழுவதுமாக துார்வாரி பாதுகாப்பு சுவர் அமைக்க வேண்டும். ஆதிதிராவிடர் நலத்துறை மூலமாக நிலம் கையப்படுத்த 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதனை உயர்த்தி, இருளஞ்சந்தை, குருவிநத்தம் மூர்த்திக்குப்பம் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்கிட வேண்டும். 

ஆதிதிராவிடர் வீடு கட்டம் திட்ட பயனாளிகளுக்கு வீடு கட்ட ஆணை வழங்கியும், அதற்கான பணம் வழங்கப்படாமல் உள்ளது. அதனை உடனடியாக வழங்க வேண்டும். விதவை பெண்களுக்கு தொழில் முனைவு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். காட்டுக்குப்பம் துணை மின் நிலையத்தை மறு சீரமைப்பு செய்ய வேண்டும்.

மழை, காற்று போன்ற நேரங்களில் மின் தடை ஏற்படுவதை தடுக்க கூடுதலாக ஏ.பி.சி., கேபிள் வழங்க வேண்டும். புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் போர்டுகளை ஸ்மார்ட் போர்டுகளாக மாற்ற வேண்டும். பாகூர் மூலநாதர் கோவில், பாகூர் மற்றும் மணப்பட்டு ஏரிகளை சுற்றுலா திட்டத்தில் சேர்க்க வேண்டும்.  ஸ்போர்ட் டெவலப்மெண்ட் அத்தாரிட்டி அமைக்க வேண்டும்.

எந்த வித கருத்து கேட்பு இல்லாமல், பட்டியலில் இருந்து,  35 விளையாட்டுகளை நீக்கி இருப்பது தவறான போக்கு. இதனை, மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us