sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 20, 2025 ,மார்கழி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வானுார் அருகே வீட்டில் பதுக்கிய ஐம்பொன் சிலைகள் பறிமுதல் 2 பேரிடம் தீவிர விசாரணை

/

வானுார் அருகே வீட்டில் பதுக்கிய ஐம்பொன் சிலைகள் பறிமுதல் 2 பேரிடம் தீவிர விசாரணை

வானுார் அருகே வீட்டில் பதுக்கிய ஐம்பொன் சிலைகள் பறிமுதல் 2 பேரிடம் தீவிர விசாரணை

வானுார் அருகே வீட்டில் பதுக்கிய ஐம்பொன் சிலைகள் பறிமுதல் 2 பேரிடம் தீவிர விசாரணை


ADDED : மார் 21, 2024 12:35 AM

Google News

ADDED : மார் 21, 2024 12:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார் : வானுார் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5 ஐம்பொன் சிலைகளை பறிமுதல் செய்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், இருவரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த புள்ளிச்சப்பள்ளம் காலனிக்கு நேற்று மதியம் சென்னையில் இருந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் 10 பேர் இரண்டு வாகனங்களில் வந்தனர்.

அவர்கள், அங்குள்ள செந்தாமரைக்கண்ணன் மகன் செல்வக்குமார்,38; வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர். அதில், வீட்டின் மாடியில் அட்டை பெட்டிகளில் பதுக்கி வைத்திருந்த நடராஜர், அம்மன், விநாயகர் உள்ளிட்ட 5 ஐம்பொன் சிலைகளை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து, வீட்டில் இருந்து அதே பகுதியை சேர்ந்த இளையராஜா,30; உள்ளிட்ட இருவரை விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து சென்றனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

பறிமுதல் செய்த ஐம்பொன் சிலைகள் செல்வக்குமார் வீட்டிற்கு எப்படி வந்தது. சிலை கடத்தலில் யார், யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீசார் தீவரமாக விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us