/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எஸ்.ஐ., பணிக்கான தேர்வு முடிவு வெளியீடு 129.50 மதிப்பெண் பெற்ற தினகர் முதலிடம்
/
எஸ்.ஐ., பணிக்கான தேர்வு முடிவு வெளியீடு 129.50 மதிப்பெண் பெற்ற தினகர் முதலிடம்
எஸ்.ஐ., பணிக்கான தேர்வு முடிவு வெளியீடு 129.50 மதிப்பெண் பெற்ற தினகர் முதலிடம்
எஸ்.ஐ., பணிக்கான தேர்வு முடிவு வெளியீடு 129.50 மதிப்பெண் பெற்ற தினகர் முதலிடம்
ADDED : பிப் 25, 2026 05:29 AM
புதுச்சேரி: சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி போலீஸ் துறையில் காலியாக உள்ள 70 எஸ்.ஐ., பணிக்கு மொத்தம் 18 ஆயிரத்து 205 பேர் விண்ணப்பித்தனர். தகுதியுடைய 16 ஆயிரத்து 472 பேர் உடல் திறன் மற்றும் உடல் தகுதி தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். அவர்களில் கோரிமேட்டில் நடந்த உடல் தகுதி மற்றும் உடல் திறன் தேர்வில் 3,440 ஆண்கள், 802 பெண்கள் என மொத்தம் 4,242 பேர் பங்கேற்றனர். அவர்களில், 1,245 ஆண்கள் மற்றும் 72 பெண்கள் என 1,317 பேர் தேர்ச்சி பெற்றனர்.
இவர்களுக்கான எழுத்து தேர்வு கடந்த 22ம் தேதி 4 மையங்களில் நடந்தது.
அதில் முதல் தாள் தேர்வை 1,284 பேர், 2ம் தாள் தேரவை 1,282 பேர் எழுதினர்.
இத்தேர்வின் முடிவுகள் நேற்று முன்தினம் இரவு வெளியிடப்பட்டது.அதில், ஆண்களுக்கான பொது பிரிவில்-20, எம்.பி.சி-8, ஓ.பி.சி-5, எஸ்.சி-8, இ.பி.சி-1, பி.சி.எம்-1, இடபிள் யூ.எஸ்-4, பெண்கள் பொது பிரிவில்-14, எம்.பி.சி-4, ஓ.பி.சி-2, எஸ்.சி-3 என 70 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான கல்வி, வயது, பிறப்பிடம், வசிப்பிடம் மற்றும் சமூக சான்றிதழ்களின் அசல் சரிபார்ப்புக்கான அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும்.

