நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: திருக்கனுார் போலீஸ் நிலையத்திற்கு தற்காலிக சப் இன்ஸ்பெக்டர் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி திருக்கனுார் போலீஸ் நிலைய சப் இன்ஸ்பெக்டர் பிரியா சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து உருளையான்பேட் போலீஸ் நிலைய சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன், திருக்கனுார் போலீஸ் நிலையத்திற்கு சப் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தேர்தல் தலைமை அதிகாரி தில்லைவேலிடம் பெற்று, புதுச்சேரி போலீஸ் தலைமையகம் எஸ்.பி., மோகன்குமார் பிறப்பித்துள்ளார்.

