sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 13, 2026 ,மார்கழி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 பள்ளி நுாலகர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

/

 பள்ளி நுாலகர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

 பள்ளி நுாலகர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

 பள்ளி நுாலகர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி


ADDED : ஜன 11, 2026 05:32 AM

Google News

ADDED : ஜன 11, 2026 05:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: தேசிய அளவிலான பள்ளி நுாலகர்களுக்கு, நுால மேலாண்மை மற்றும் பராமரிப்பு என்ற தலைப்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.

மைசூர் மண்டல கல்வி நிறுவனம் மற்றும் புதுச்சேரி பயிற்சி மையம் இணைந்து, டிஜிட்டல் சூழலில் பள்ளி நுாலக மேலாண்மை மற்றும் பராமரிப்பு என்ற தலைப்பில், லாஸ்பேட்டையில், கடந்த 5ம் தேதி துவங்கி 9ம் தேதி வரை 5 நாட்கள் பயிற்சி நடந்தது. பயிற்சியை, தலைமை நுாலகர் ஆகாஷ், மைசூர் மண்டல கல்வி நிறுவன சிறப்பு பயிற்றுனர்கள் நாகராஜா, அனுபமா ஹெக்டே, ஒருங்கிணைப்பாளர் கவராம்மா ஆகியோர் துவக்கி வைத்தனர்.

பயிற்சியில், புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளில் இருந்து அரசு பள்ளிகளில் பணிபுரியும் 50 நுாலகர்கள் கலந்து கொண்டனர். பயிற்சி நிறைவு விழாவில், பள்ளி கல்வி இயக்குநர் சிவக்குமார், எழில் கல்பனா, மாநில பயிற்சி மையத்தின் சிறப்பு அதிகாரி சுகுணா ஆகியோர் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினர்.

இன்றைய டிஜிட்டல் கல்வி சூழலில், பள்ளி நுாலகங்களின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ளவும், கல்வியில் டிஜிட்டல் மாற்றத்தின் அவசியம் மற்றும் மாணவர்களில் வாசிப்பு பழக்கத்தை வளர்ப்பதில் நுாலகத்தின் பங்கு, அறிவு மற்றும் செயற்கை நுண்ணறிவு குறித்து எடுத்துரைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us