/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுல்தான்பேட்டை அரசு பள்ளிக்கு 'ஸ்மார்ட் போர்டு' வழங்கல்
/
சுல்தான்பேட்டை அரசு பள்ளிக்கு 'ஸ்மார்ட் போர்டு' வழங்கல்
சுல்தான்பேட்டை அரசு பள்ளிக்கு 'ஸ்மார்ட் போர்டு' வழங்கல்
சுல்தான்பேட்டை அரசு பள்ளிக்கு 'ஸ்மார்ட் போர்டு' வழங்கல்
ADDED : டிச 14, 2025 05:31 AM

வில்லியனுார்: சுல்தான்பேட்டை காயிதே மில்லத் அரசு மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு திடல் திறப்பு மற்றும் ஸ்மார்ட் போர்டு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி ரிவேஜ் ரவுண்ட் டேபிள் 104 சங்கம் நிதியுதவியுடன் நடந்த விளையாட்டு திடல் மற்றம் வகுப்பறை ஸ்மார்ட் போர்டு வழங்கல் நிகழ்ச்சிக்கு பள்ளி துணை முதல்வர் மோகன் தலைமை தாங்கினார்.
ரவுண்ட் டேபிள் ரிவேஞ் சங்கத் தலைவர்கள் விக்னேஷ்வரன் மற்றும் ஆனந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ், ஸ்மார்ட்டு போர்டு வழங்கி, விளையாட்டு திடலை திறந்து, போட்டிகளையும் துவங்கி வைத்தார். ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

