/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பனித்திட்டு கடற்கரையை துாய்மைப்படுத்தும் பணி
/
பனித்திட்டு கடற்கரையை துாய்மைப்படுத்தும் பணி
ADDED : செப் 23, 2025 07:42 AM

புதுச்சேரி : சர்வதேச கடலோர துாய்மை தினத்தையொட்டி, எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் பனித்திட்டு கடற்கரையில் துாய்மை பணி நடந்தது.
மீன்வளத்துறை இணை இயக்குநர் தெய்வசிகாமணி, ஹைதராபாத், இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையத்தின் விஞ்ஞானி விஜய், சென்னை மீன்தர மேலாண்மை மற்றும் நிலையான மீன்பிடித்தலுக்கான வலையமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் அருள்ஜோதி, சுவாமிநாதன் ஆராய்ச்சி நிலைய ஒருங்கிணைப்பாளர் கிரிஜா ஆகியோர் தலைமை தாங்கினார்.
பனித்திட்டு கிராம நிர்வாக அலுவலர் அன்பழகன் வரவேற்றார். இதில், தவளக்குப்பம் ராஜிவ் காந்தி கல்லலுாரி என்.எஸ்.எஸ்., மாணவர்கள், அரசுப் பள்ளி ஆசிரியர்கள், நகராட்சி ஊழியர்கள் உட்பட 120 தன்னார்வலர்கள், கடற்கரையை துாய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
ஏற்பாடுகளை ஆராய்ச்சி நிறுவன வளர்ச்சி உதவியாளர் லுார்துசாமி, அறிவு பணியாளர் அகிலா அறிவு பணியாளர் செய்திருந்தனர்.
இதில், 565 கிலோ கடலோர கழிவுகள் சேகரிக்கப்பட்டு, சுகாதார ஊழியர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. துாய்மை பணியில் ஈடுபட்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.