sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

உப்பளத்தில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு; அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., ஆலோசனை

/

உப்பளத்தில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு; அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., ஆலோசனை

உப்பளத்தில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு; அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., ஆலோசனை

உப்பளத்தில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு; அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., ஆலோசனை


ADDED : பிப் 14, 2024 03:34 AM

Google News

ADDED : பிப் 14, 2024 03:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : உப்பளம் தொகுதியில் குடி தண்ணீர் பிரச்னை குறித்து, அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பொதுப்பணி துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ., அனிபால் கென்னடி, நேற்று பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் உமாபதியை சந்தித்தார். அப்போது அவரிடம், 'பழைய பைப் லைன்களை எடுத்து புதிதாக குடிநீர் குழாய் அமைத்து பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டும்.

வாணரப்பேட்டை, தாமரை நகரில் ஆழ்துளை கிணறு பணி முடிந்து விட்டது. தற்பொழுது அங்கு பொது மக்களுக்கு குடிநீர் சரிவர கிடைக்கவில்லை. இதனை உடன் சீர் செய்யவேண்டும்.

தாவரவியல் பூங்கா ஆட்டுப்பட்டியில், பணிகள் முடிந்து இன்னும் மின் இணைப்பு கொடுக்க வில்லை. மின் இணைப்பு உடனடியாக பெற்று தடையில்லா குடிதண்ணீர் வழங்கிட ஏற்பாடுகள் செய்ய வேண்டும்,' என அறிவுறுத்தினார்.

மேலும், அவர் 'தாமரைநகர், தமிழ்தாய் நகர், காளியம்மன் தோப்பு, முருகசாமி தோப்பு ஆகிய பகுதியில் தடையில்லா குடிநீர் கிடைக்க வேண்டும்,' என வலியுறுத்தினார்.

இந்த சந்திப்பில், இளநிலை பொறியாளர் வெங்கடேசன் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் நோயல், ராகேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us