/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தாய் இறந்த சோகத்தில் மகன் தற்கொலை
/
தாய் இறந்த சோகத்தில் மகன் தற்கொலை
ADDED : டிச 16, 2025 04:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: தாய் இறந்த சோகத்தில் மகன் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கொம்பாக்கம், குமரன் நகரை சேர்ந்தவர் தயானந்தன், 73; இவரது மனைவி கடந்த 6ம் தேதி உடல்நிலை சரியில்லாமல் இறந்தார். அன்று முதல் அவரது மகன் தேவபிரியன், 39; மன வருத்தத்தில் இருந்து வந்தார்.
இந்நிலையில், தேவபிரியன் நேற்று முன்தினம் வீட்டில் வைத்திருந்த எலி பேஸ்டை சாப்பிட்டு, தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தேவபிரியன் இறந்தார்.
புகாரின்பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

