ADDED : அக் 12, 2024 03:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : மனநலம் பாதிக்கப்பட்ட மகனை காணவில்லை என தாய் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
சேதாரப்பட்டு நாகத்தம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் மதுரம்பாள். இவரது மகன் சுகுமார், 45; மனநலம் பாதித்தவர்.
ஜிப்மரில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 6ம் தேதி மாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற சுகுமார் வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து மதுரம்பாள் கொடுத்த புகாரின் பேரில், சேதாரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

