ADDED : செப் 25, 2024 04:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி,: மனநிலை பாதிக்கப்பட்ட மகனை காணவில்லை தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.
புதுச்சேரி கண்டாக்டர் தோட்டத்தை சேர்ந்தவர் நரசிம்மன் மகன் பன்னீர்செல்வம், 15; மனநிலை பாதித்த அவர், மருத்துவமனையில், சிகிச்சை பெற்று, மருந்து சாப்பிட்டு வருகிறார். இந்நிலையில், கடந்த 2ம் தேதி அவர் வீட்டில் இருந்து வெளியில் சென்றார். வெகு நேரமாகியும் அவர் வரவில்லை. உறவினர்கள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்க வில்லை.
இதுகுறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.