/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மருமகன் இறந்த சோகம் மாமனார் தற்கொலை
/
மருமகன் இறந்த சோகம் மாமனார் தற்கொலை
ADDED : ஆக 02, 2025 07:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : மருமகன் இறந்த துக்கத்தில் மாமனார் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
முத்தியால்பேட்டை, பாப்பம்மாள் வீதியைச் சேர்ந்தவர் கணேசன், 50; கொத்தனார். குடிப்பழக்கம் உள்ள இவர் சரியாக வேலைக்கு செல்லாமல் குடித்து வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன், அவரது மூத்த மருமகன் இறந்து விட்டார். அதிலிருந்து துயரத்தில் இருந்து வந்த கணேசன், நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரது மனைவி புனிதா கொடுத்த புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.