ADDED : ஏப் 27, 2025 04:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : மகனை காணவில்லை என, தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
வில்லியனுார் கணுவாபேட், புதுநகர் 7 வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் தமிழ்செல்வன், 15; பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் காலை உறவினர் ஸ்நாக்ஸ் தாயரிக்கும் கம்பெனிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.