ADDED : ஆக 17, 2025 10:21 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : மகனை காணவில்லை என தாய், போலீசில் புகார் தெரிவித்தார்.
ரெட்டியார்பாளை யம், லம்பார்ட் சரவணன் நகரை சே ர்ந்தவர் செல்வமணி. இவரது மகன் கோபால் மணி, 14. இவர் ரெட்டியார்பாளையம் அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், படிக்காமல் மொபைல் போன் பார்த்துள்ளார். இதை, அவரது தாய் மகனை கண் டித்துள்ளார். கோபடைந்த அவர், கடந்த 15 ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மாலை வரை வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து, அவரது தாய் ஆன்ந்தவள்ளி கொடுத்த புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.