ADDED : ஏப் 08, 2026 06:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: மகனை காணவில்லை என, தாய் போலீசில் புகார் செய்துள்ளார்.
வீராம்பட்டினத்தை சேர்ந்தவர் ஜெயராமன் மகன் அரிநாதன், 14. இவர், 8ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். கடந்த 25ம் தேதி, வீட்டில் இருந்து வெளியில் சென்றவர், இதுவரை வீடு திரும்ப வில்லை. உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
அவரது தாய் ராஜேஸ்வரி புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

