ADDED : ஏப் 08, 2026 06:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பொது இடத்தில் ஆபாசமாக பேசிய நபரை போலீசார் கைது செய்தனர்.
மங்கலம் போலீசார் ஏப்ரல் 7 ஆம் தேதி இரவு ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது கீழ்சாத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த பாவாடை, 46, என்பவர் குடி போதையில், கீழ்சாத்தமங்கலம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை பார்த்து ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தார். அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து, கைது செய்தனர்.

