/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலை அமைக்கும் பணி சபாநாயகர் துவக்கி வைப்பு
/
சாலை அமைக்கும் பணி சபாநாயகர் துவக்கி வைப்பு
ADDED : நவ 14, 2025 02:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: நோணாங்குப்பத்தில் 32.70 லட்சம் ரூபாய் மதிப்பில், சாலையுடன், கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி துவக்கப்பட்டது.
நோணாங்குப்பம் புது காலனியில் சிமென்ட் சாலையுடன், வாய்க்கால் அமைக்க, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டு நிதியின் மூலம் 32.70 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான பணியை, சபாநாயகர் செல்வம் நேற்று துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், செயற்பொறியாளர் விக்டோரியா, இளநிலைப்பொறியாளர் ஜெயமுகுந்தன் உட்பட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

