sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஈஸ்டர் பண்டிகை சிறப்பு திருப்பலி 

/

ஈஸ்டர் பண்டிகை சிறப்பு திருப்பலி 

ஈஸ்டர் பண்டிகை சிறப்பு திருப்பலி 

ஈஸ்டர் பண்டிகை சிறப்பு திருப்பலி 


ADDED : ஏப் 21, 2025 04:26 AM

Google News

ADDED : ஏப் 21, 2025 04:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நேற்று நடந்தது.

ஏசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு 40 நாட்கள் உபவாச ஜெபத்தில் இருந்ததை நினைவு கூறும் தவக்காலம் கடந்த மார்ச் 5ம் தேதி துவங்கியது.

ஒவ்வொரு வெள்ளியும் சிலுவைப்பாடு நினைவு கூறப்பட்டது. கடந்த 18 ம் தேதி புனித வெள்ளி கடைப்பிடிக்கப்பட்டது.

இதையடுத்து, இயேசு உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு நேற்று கிறிஸ்துவ தேவாலங்களில் சிறப்பு திருப்பலி நடந்தது.

அதன்படி, மிஷன் வீதியில் உள்ள துாய ஜென்மராக்கினி தேவாலங்களில் புதுச்சேரி - கடலுார் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.

இதேபோல், நெல்லித்தோப்பு விண்ணேற்பு அன்னை ஆலயம், ரயில் நிலையம் எதிரே உள்ள துாய இருதய ஆண்டவர் பசிலிக்கா ஆலயம், அரியாங்குப்பம் ஆரோக்கிய அன்னை ஆலயம், ஆட்டுப்பட்டி அந்தோணியர் ஆலயம், தட்டாஞ்சாவடி பாத்திமா ஆலயம் உட்பட தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்துவர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.






      Dinamalar
      Follow us