ADDED : நவ 24, 2024 04:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: பாகூர் வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவிலில், கார்த்திகை மாத அஷ்டமியையொட்டி, காலபைரவருக்கு நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.
அதையொட்டி மூலநாதர், வேதாம்பிகையம்மன், பாலவிநாயகர், முருகர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
இரவு 7:00 மணிக்கு கால பைரவருக்கு, பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபி ஷேகம், உலக நன்மை வேண்டி அஷ்ட பைரவ ஹோமம் நடந்தது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் கால பைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.