/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்
/
பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்
ADDED : ஜன 17, 2026 05:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: சொரப்பூர் லட்சுமிநாராயணப் பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.
நெட்டபாக்கம் அடுத்த சொரப்பூர் கிராமத்தில் கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் தை முதல் வெள்ளிக் கிழமையையொட்டி, பெருமாளுக்கு மாலை 4:30 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. இரவு 7:30 மணிக்கு சன்னதி புறப்பாடு நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

