/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா
/
விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா
ADDED : பிப் 15, 2025 07:18 AM

புதுச்சேரி : புதுச்சேரி மேட்டுப்பாளையம் அருட்செல்வி ஆயி அம்மாள் அரசு நடுநிலைப் பள்ளியில் விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.
தலைமையாசிரியர் அனிதா தலைமை தாங்கினார். ஆசிரியை சுமதி ராகவன் வரவேற்றார்.
கல்வித்துறை பெண் கல்வி துணை இயக்குனர் சிவராம ரெட்டி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் இணை இயக்குனர் வைத்தியநாதன் ஆகியோர் விழாவினை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக தலைமை ஆசிரியர் பாஸ்கரராசு, பள்ளி மேலாண்மை குழு தலை வர் எமல்டா ஷீலா ஆகியோர் கலந்து கொண்டு பள்ளியில் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ் வழங்கினர்.
ஆசிரியர் சின்னராசு விழாவினை தொகுத்து வழங்கினார். உடற்கல்வி ஆசிரியர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.