sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஆரோவில்லில் தங்கியிருந்த இலங்கை அகதி, முகாமில் ஒப்படைப்பு

/

ஆரோவில்லில் தங்கியிருந்த இலங்கை அகதி, முகாமில் ஒப்படைப்பு

ஆரோவில்லில் தங்கியிருந்த இலங்கை அகதி, முகாமில் ஒப்படைப்பு

ஆரோவில்லில் தங்கியிருந்த இலங்கை அகதி, முகாமில் ஒப்படைப்பு


ADDED : அக் 10, 2025 03:51 AM

Google News

ADDED : அக் 10, 2025 03:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்: இலங்கையில் இருந்து படகு மூலம் தமிழகத்திற்கு தப்பி வந்து, ஆரோவில்லில் தங்கியிருந்த இலங்கை அகதியை போலீசார் சிறப்பு முகாமில் ஒப்படைத்தனர்.

இலங்கை, யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் சிவ பாதசுந்தரம் மகன் சங்கராபரணன், 58; இவர் கடந்த, 1990ம் ஆண்டு இலங்கையில் இருந்து படகு மூலம் தமிழகப்பகுதிக்கு அகதியாக வந்தார். இங்கு பல்வேறு இடங்களில் தங்கி வேலை செய்து வந்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன், சர்வதேச நகரமான ஆரோவில்லில், தன்னார்வலராக சேர்ந்தார். தொடர்ந்து, ஆரோவில் வாசியாகவும் மாறி, அங்கு பணியாற்றி வந்தார்.

இதனிடையே இலங்கையில் இருந்து படகு மூலம் வந்த அவரை, சென்னை (எப்.ஆர்.ஆர்.ஓ.,) வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலக அதிகாரிகள் தேடி வந்தனர்.

இந்நிலையில் ஆரோவில் பகுதியில் சங்கராபரணன் வசித்து வருவதாக சென்னை எப்.ஆர்.ஆர்.ஓ., அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் ஆரோவில் போலீசாரின் உதவியோடு நேற்று முன்தினம் அவரை, சென்னை எப்.ஆர்.ஆர்.ஓ., அதிகாரிகள் பிடித்து, திருச்சி சிறப்பு முகாமில் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us