ADDED : பிப் 26, 2024 04:58 AM

புதுச்சேரி: புதுச்சேரி ஷைனர்ஸ் பெத்தாங் கிளப் மற்றும் நியூ பெத்தாங் கிளப் அசோசியேஷன் சார்பில், மாநில அளவிலான பெத்தாங் போட்டி உழவர்கரை அரசுமேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடந்தது.
போட்டியை அருண்சர்மா சாரிட்டபுள் டிரஸ்ட்நிர்வாக இயக்குனர் வீரராகு, பிரபாதேவி வீரராகு ஆகியோர்துவக்கி வைத்தனர். புதுச்சேரியை சேர்ந்த334 அணியினர் பங்கேற்கின்றனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 7,000 வீதம் 2 பேருக்கும், இரண்டாம் பரிசு 6,000 வீதம் 2 பேருக்கு, மூன்றாம்பரிசு 4, 000 வீதம் 4 பேருக்கு, நான்காம் பரிசு ரூ.2000 வீதம் 8பேருக்கு வழங்கப்பட்டது.
கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் கலந்து கொண்ட16 பேருக்கு ரூ.1000 வீதம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது.
அனைத்துபரிசுத்தொகையும் அருண்சர்மா ஷேரிட்டபுள் டிரஸ்ட் வழங்குகிறது.
நிகழ்ச்சியில், விளையாட்டு சங்கவீரர்கள் ஜோசப், சிமோன், ராஜா, பத்ரிஸ் தெலமாஸ், திவாகரன், சத்தியராஜ் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

