sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புகையிலை கட்டுப்படுத்த மாநில அளவிலான பயிற்சிக்கூட்டம்

புகையிலை கட்டுப்படுத்த மாநில அளவிலான பயிற்சிக்கூட்டம்

புகையிலை கட்டுப்படுத்த மாநில அளவிலான பயிற்சிக்கூட்டம்


ADDED : அக் 26, 2024 05:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 26, 2024 05:57 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் புகையிலையை கட்டுப்படுத்துவதற்கான மாநில அளவிலான பயிற்சிக்கூட்டம் நடந்தது.

புதுச்சேரி அரசு நலவழித்துறையின் மாநில புகையிலை கட்டுப்பாட்டு மையம் மற்றும் ஜிப்மர் இணைந்து நடத்திய மாநில அளவிலான பயிற்சிக்கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் ஜிப்மர் நோய் தடுப்பு மற்றும் சமூக மருத்துவ துறை பேராசிரியர் கணேஷ் மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் துணை இயக்குனர் சிவகாமி ஆகியோர் பேசினர்.

கலெக்டர் குலோத்துங்கன் கூட்டத்திற்கு தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.

மாநில புகையிலை கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேஷ், புதுச்சேரியில் தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டத்தின் செயல்பாடுகளை பற்றி விளக்கினார். இந்த கூட்டத்தில் புகையிலையினால் ஏற்படும் பாதிப்புகள், புதுச்சேரியில் புகையிலை கட்டுப்பாட்டிற்கான வழிமுறைகள், இடர்ப்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது.

மேலும், நிகழ்ச்சியில் புகையிலை இல்லா பள்ளி வளாகம் என்னும் சான்றிதழை, கலெக்டர் ஐந்து பள்ளிகளுக்கு வழங்கினார். இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாநில ஆலோசகர் சூரியக்குமார் மேற்கொண்டார்.

பேராசிரியை ஜெயலட்சுமி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us