sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பிள்ளையார்குப்பம் வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை தேவை

/

பிள்ளையார்குப்பம் வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை தேவை

பிள்ளையார்குப்பம் வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை தேவை

பிள்ளையார்குப்பம் வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை தேவை


ADDED : அக் 09, 2024 04:36 AM

Google News

ADDED : அக் 09, 2024 04:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர் : பிள்ளையார்குப்பம் மெயின் ரோட்டில் உள்ள வடிகால் வாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார்வாரிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுச்சேரி - கடலுார் சாலையில், பிள்ளையார்குப்பம் சந்திப்பில் பெரிய வடிகால் வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால், பாகூரில் இருந்து பின்னாட்சிக்குப்பம், சார்காசிமேடு, பிள்ளையார்குப்பம், கிருமாம்பாக்கம் வழியாக ரெட்டிச்சாவடி ஓடையில் கலக்கிறது.

பிள்ளையார்குப்பம் பஸ் நிறுத்த பகுதி வழியாக செல்லும் இந்த வாய்க்கால் பல இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. 20 அடி அகலம் கொண்ட இந்த வாய்க்கால், சில இடங்களில் மூன்று அடியாக சுருங்கி விடுகிறது.

இதனால், மழை காலங்களில் தண்ணீர் செல்ல முடியாமல், சாலையில் தேங்கி நின்று வாகன ஓட்டிகளை பெரும் அவதிக்குள்ளாக்கி வருகிறது. வாய்க்காலின் குறுக்கே பல இடங்களில் அனுமதி பெறாமல் பாலங்கள் கட்டி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேலும், துார்வாரப்படாததால், குப்பைகள் குவிந்தும், செடி, கொடிகள் முளைத்து நீர் போக்கு தடைபட்டுள்ளது.

இதனால், மழை நீர் வயல்கள் வழியாக சென்று பயிர்களை சேதப்படுத்துவதால், விவசாயிகள் பாதிக்கப்படுவது தொடர் கதையாக உள்ளது. எனவே, இந்த வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us