ADDED : நவ 30, 2024 05:05 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி : புதுச்சேரி அரசு சார்பில் புயல் எச்சரிக்கை எஸ்.எம்.எஸ்., நேற்று இரவு அனுப்பப்பட்டது.
புயல் எச்சரிக்கையை முன்னிட்டு, புதுச்சேரி அரசு சார்பில், '30.11.2024 பெஞ்சல் புயல் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே, புதுச்சேரி அருகே கரையை கடக்கும்போது காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் - புதுச்சேரி அரசு' என்ற வாசகம் அடங்கிய எச்சரிக்கை எஸ்.எம்.எஸ்., நேற்று இரவு முதல் பொதுமக்கள் அனைவரது மொபைல் எண்களுக்கும் அனுப்பப்பட்டது.
