/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தெரு நாய்களுக்கு மீண்டும் கருத்தடை
/
தெரு நாய்களுக்கு மீண்டும் கருத்தடை
ADDED : பிப் 02, 2026 03:07 AM
புதுச்சேரி: உழவர்கரை பகுதியில் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யும் பணி மீண்டும் துவங்கி உள்ளது.
இது குறித்து உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் செய்திக்குறிப்பு;
தெரு நாய்கள் பிடிக்கும் நடவடிக்கையின் போது, பொதுமக்கள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள், நகராட்சிக்கு ஒத்துழைத்து இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த முன்வர வேண்டும்.
வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்குகான உரிமம் பிரதி புதன்கிழமை தோறும் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30மணி வரை மேட்டுப்பாளையம் சிக்னல் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையில் நகராட்சியால் வழங்கப்படுகிறது.இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் மற்றும் தெருநாய்கள் தொடர்பான புகார்கள் இருந்தால் 1800-599-1810 என்ற எண்ணில், அலுவலக நேரங்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

