ADDED : மார் 17, 2024 05:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கல்லுாரி மாணவரின் பைக்கை திருடிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
முத்தியால்பேட்டை சோலை நகர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் நரேஷ், 19; தனியார் கேட்டரிங் கல்லுாரியில் படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு தனது பைக்கை வீட்டு முன்பு நிறுத்தி விட்டு துாங்க சென்றார். நேற்று காலை பார்க்கும் போது, பைக் காணவில்லை.
புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, பைக் திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

