ADDED : ஜூன் 05, 2026 04:44 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: கோடை விடுமுறை முடிந்து மாணவர்கள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து பள்ளிக்கு சென்றனர்.
புதுச்சேரியில் கோடை விடுமுறை முடிந்து, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. ஆர்வமுடன் மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர்.
இந்நிலையில், முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் லட்சுமி ஹயக்ரீவர் பெருமாள் கோவிலில் மாணவர்களுக்காக காலை சிறப்பு திருமஞ்சனம் மற்றும் தீபாராதனை நடந்தது.
பள்ளிக்கு செல்லும் முன் அப்பகுதியில் உள்ள மாணவர்கள் பெற்றோர்களுடன் கோவிலிலுக்கு சென்று, சுவாமி தரிசனம் செய்தனர். பிறகு பள்ளிக்கு சென்றனர்.
