ADDED : ஜூலை 24, 2025 10:11 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி; போட்டோ ஸ்டூடியோ உரிமையாளர் கழிவறையில் மயங்கி விழுந்து இறந்தார்.
திருக்கனுார் அடுத்த செல்லிப்பட்டு, பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் செல்வகுமார், 34; பொது சேவை மையம் மற்றும் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வந்தார். இந்நிலையில், அவரது பெற்றோர் இறந்து விட்டதால், தனது நண்பரான, சோலை நகரை சேர்ந்த முகிலன் என்பவரது வீட்டில் வசித்து வந்துள்ளார்.
செல்வகுமார் நேற்று முன்தினம் முகிலன் வீட்டின் கழிவறையில் மயங்கி கிடந்தததால், அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர், அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
