/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதியவர் தற்கொலையில் திடீர் திருப்பம் : தனியார் நிதி நிறுவனம் மீது புகார்
/
முதியவர் தற்கொலையில் திடீர் திருப்பம் : தனியார் நிதி நிறுவனம் மீது புகார்
முதியவர் தற்கொலையில் திடீர் திருப்பம் : தனியார் நிதி நிறுவனம் மீது புகார்
முதியவர் தற்கொலையில் திடீர் திருப்பம் : தனியார் நிதி நிறுவனம் மீது புகார்
ADDED : ஏப் 19, 2025 01:37 AM
திருக்கனுார்::
மளிகை கடை உரிமையாளர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவரது மனைவி, தனியார் நிதி நிறுவனத்தின் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.
திருக்கனுார் அடுத்த சோரப்பட்டு, தென்னஞ்சாலை வீதியை சேர்ந்தவர் பெரியண்ணசாமி, 59; மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி கவுரி. 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
பெரியண்ணசாமி கடந்த மார்ச் 15ம் தேதி வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி கவுரி திருக்கனுார் போலீசில் அளித்த புகாரில், குடிப்பழக்கம் உடைய தனது கணவர் பெரியண்ணாசாமி, கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு, அதற்கான மருந்து சாப்பிட்டு வந்ததாகவும், கடந்த 15ம் தேதி வயிற்று வலி அதிகமானதால், துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக புகார் அளித்திருந்தார்.
அதன் பேரில், திருக்கனுார் போலீசார் சந்தேக மரணம் 194 பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் (17 ம் தேதி) அவரது மளிகை கடையை திறந்து பார்த்தபோது, அங்கு கடிதம் ஒன்று இருந்துள்ளது. அதில், தனியார் நிதி நிறுவனத்தில் பெற்ற கடனுக்காக, தன்னை அவமானப்படுத்தியதால், தற்கொலை செய்து கொள்வதாக எழுதி இருப்பதாக அவரது மனைவி கவுரி மீண்டும் திருக்கனுார் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, கடிதத்தின் உண்மை தன்மை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.