ADDED : மார் 04, 2024 05:38 AM
அ நிறம் | அளவு
நெட்டப்பாக்கம் : பண்டசோழநல்லுார் அறம் நற்பணி இயக்கம் சார்பில் பொதுத்தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு எழுதுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
அம்பேத்கர் பொது நுாலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, இயக்கத் தலைவர் பிரபாகரன் தலைமை தாங்கினார். அரசு பள்ளி நுாலகர் கலியமூர்த்தி, நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளி விரிவுரையாளர் எழில்வேந்தன் ஆகியோர், பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து பேசினர்.நிகழ்ச்சியில், முருகன், பலராமன், நாகலிங்கம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
