ADDED : ஏப் 14, 2025 04:26 AM

திருபுவனை:திருபுவனை அடுத்த கொத்தபுரிநத்தம் கிராமத்தில் 650 குடும்பங்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
புதுச்சேரி அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின், மாசுக்கட்டுப்பாட்டு குழுமம் மற்றும் திருபுவனை ரெவோகோட் இண்டியா நிறுவனம், புதுச்சேரி பசுமை இயக்கம், வீட்டுக்கு ஒரு மரம், தாயின் பெயரில் ஒரு மரம் திட்டத்தின் மூலம் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை விஞ்ஞானி விபின்பாபு, திட்ட அலுவலர்கள் சாந்தலட்சுமி, விமல்ராஜ், திருபுவனை ரெவோகோட் இண்டியா நிறுவனத்தின், நிர்வாக மேலாளர் பிரபு, பாதுகாப்பு அதிகாரி வடிவேல், பர்சேஸ் மேனேஜர் பிரியா மற்றும் ஆரோன், அருணாசலம் உள்ளிட்ட அதிகாரிகள் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் அங்கன்வாடி பணியாளர் பிலோசகாயமேரி உள்பட பலர் கலந்துகொண்டனர். கிராமத்தில் உள்ள 650 குடும்பங்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.