ADDED : ஆக 17, 2026 07:53 PM
அ நிறம் | அளவு
வில்லியனுார்: புதுச்சேரி ஊரக வளர்ச்சி முகமை சார்பில் வில்லியனுார் வட்டார வளர்ச்சி அலுவகம் மூலம் எம்.கே.எஸ்.பி. திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கு காய்கறி விதைத் தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வில்லியனுார் மற்றும் மங்கலம் ஆகிய இரு தொகுதியைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு காய்கறி விதைத் தொகுப்பு பைகளை ரவிக்குமார் எம்.எல்.ஏ., வழங்கினார்.
வில்லியனூர் வட்டார வளர்ச்சி இணை அதிகாரி கலைமதி, முன்னாள் சேர்மன் பாலமுருகன், சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
