நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: கரிக்கலாம்பாக்கம் வள்ளி தேவசனோ சமேத குமரேஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா நாளை மாலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
இதையொட்டி, தினமும் சுவாமிக்கு காலை சிறப்பு அபி ேஷக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது.வரும் 6ம் தேதி மாலை 6:30 மணிக்கு குமரேஸ்வர் சுவாமி, அம்மனிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி, 7ம் தேதி மாலை சூரசம்ஹாரம், 8ம் தேதி இரவு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.10ம் தேதி காலை சுவாமிக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.