நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம் : கரிக்கலாம்பாக்கம் வள்ளி தேவசனோ சமேத குமரேஸ் வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நேற்று நடந்தது.
கரிக்கலாம்பாக்கம் குமரேஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி சூரசம்ஹாரம் விழா கடந்த 2ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இதையொட்டி, தினமும் சுவாமிக்கு காலை சிறப்பு அபி ேஷக ஆராதனைகளும், இரவு சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று மாலை சுவாமிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
இதையொட்டி காலை சுவாமிக்கு சிறப்பு அபி ேஷகம் ஆராதனைகள் நடந்தது. மாலை கேரளா இசையுடன் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. தொடர்ந்து இரவு சுவாமி வீதியுலா நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.