நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: மோட்சக்குளம் நாகத்தம்மன் கோவிலில் பவுர்னமி முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
மடுகரை அடுத்த மோட்சக்குளம் நாகத்தம்மன் கோவிலில் பவுர்னமியை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதையொட்டி காலை 10.00 மணிக்கு அம்மனுக்கு, சிறப்பு அபிேஷகம் ஆராதனைகள் நடந்தது.
இரவு 8.00 மணிக்கு கேரளா இசையுடன் ஊஞ்சல் உற்சவமும், இரவு 9.00 மணிக்கு அன்னதானம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

