sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ரூ.7 கோடி செலவில் சிந்தடிக் ட்ராக்... வீணாகுது ; தடகள வீரர்கள் கடும் அதிருப்தி

/

ரூ.7 கோடி செலவில் சிந்தடிக் ட்ராக்... வீணாகுது ; தடகள வீரர்கள் கடும் அதிருப்தி

ரூ.7 கோடி செலவில் சிந்தடிக் ட்ராக்... வீணாகுது ; தடகள வீரர்கள் கடும் அதிருப்தி

ரூ.7 கோடி செலவில் சிந்தடிக் ட்ராக்... வீணாகுது ; தடகள வீரர்கள் கடும் அதிருப்தி


ADDED : ஏப் 29, 2024 05:33 AM

Google News

ADDED : ஏப் 29, 2024 05:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் சிந்தடிக் ட்ராக் பணி முடிந்தும் கூட, பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்படாமல் வீணாகி வருகின்றது.

புதுச்சேரி உப்பளத்தில் கடந்த 1992-ம் ஆண்டு இந்திரா காந்தி விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டது.

இங்கு 400 மீட்டர் சுற்றளவுள்ள ஓடு பாதை, புல்வெளி மைதானம், வீரர்கள் தங்குமிடம், பார்வையாளர்கள் அமர கேலரி ஆகியவை அமைக்கப்பட்டன. இத்துடன் கால்பந்து, நீளம் மற்றும் உயரம் தாண்டுதல், ஹாக்கி, கையுந்து பந்து, கைப்பந்து மைதானங்களும் உருவாக்கப்பட்டன.

பிறகு ரூ.80 லட்சத்தில் மின்விளக்கு வசதி செய்யப்பட்டது. பகல் மட்டு மல்லாமல் இரவு நேரங்களிலும் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

மாநில அளவிலான போட்டிகளும் பகல், இரவு நேரங்களில் நடத்தப்பட்டு வந்தன. இதனால் வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி பதக்கங்களை குவித்தனர்.

தொடர்ந்து, தேசிய போட்டிகளிலும் பங்கேற்று சாதித்து காட்டினர்.காலப்போக்கில் முறையான பராமரிப்பு இல்லாததால் மைதானத்தில் உள்ள தடகள வீரர்களுக்கான ஓடுபாதை, கால்பந்து மைதானம் உள்ளிட்டவை சேதமடைந்தது.

இதனிடையே கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரியில் புதுச்சேரிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி இந்திரா காந்தி அரங்கில் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.7 கோடி செலவில் 400 மீட்டர் சிந்தடிக் ட்ராக் எனப்படும் செயற்கை தடகள ஓடுபாதை அமைக்க அடிக்கல் நாட்டினார்.தொடர்ந்து சிந்தடிக் ஒட்டும் பணிக்காக ஆஸ்திரேலியாவில் இருந்து சிந்தடிக் டிராக் லேயர் கொண்டு வரப்பட்டது.

ஆமை வேகத்தில் பல ஆண்டுகளாக நடந்து வந்த இந்த மேம்பாட்டு பணிகள் அனைத்தும் முடிந்து மைதானம் சிவப்பு கம்பளம் விரித்தது போல் காட்சி அளிக்கிறது.ஆனால் விளையாட்டு மைதானம் விளையாட்டு வீரர்களுக்கு அர்ப்பணிக்கப்படாமல் வீணாகி வருகின்றது.

தடகள வீரர்களுக்கான சிந்தடிக் ட்ராக் கட்டியும் எந்த பலனும் இல்லை.கடற்கரை பகுதிகளுக்கு சென்று தடகள பயிற்சி பெற்று வருகின்றனர். சிந்தடிக் ட்ராக் அமைத்தும் என்ன பயனம் என்று தடகள விளையாட்டு வீரர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

சிந்தடிக் ட்ராக்குகளை அமைத்தால் மட்டும்போதாது.அவற்றை தண்ணீர் ஊற்றி,குறிப்பிட்ட சிதோஷண சூழ்நிலையில் முறையாக பராமரிக்க வேண்டும்.இல்லையெனில் சிந்தடிக் பயன்படுத்த முடியாத அளவிற்கு கடினமாகி விடும்.ஒரு கட்டத்தில் மட்கி வீணாகி விடும்.இதேபோல் கடந்த காலங்களில் ஹாக்கி மைதானத்திற்கு சிந்தடிக்கு ட்ராக் அமைத்தனர்.அவற்றை முறையாக பராமரிக்காமல் பல்லிளித்தது.இது தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளும் முன் வைக்கப்பட்டன.

அதேபோன்று இப்போது தடகள வீரர்களுக்கு அமைக்கப்பட்ட சிந்தடிக் ட்ராக் கட்டியும் வீணாகி வருகின்றது.இப்படியே விட்டால் இன்னும் சில ஆண்டுகளில் சிந்தடிக் மைதானம் தனித்தனியே ஆங்காங்கே கழன்றுவந்து விடும்.

உடற்பயிற்சி முக்கியத்துவம் கொடுக்கும் கவர்னர் ராதாகிருஷ்ணன் ஒரு முறை,இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்திற்கு விசிட் அடித்து பார்த்தால்,சிந்தடிக்க ட்ராக்கிற்கும்,தடகள விளையாட்டு வீரர்களுக்கும் விடிவு காலம் பிறக்கும்.






      Dinamalar
      Follow us