ADDED : டிச 08, 2025 05:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: தேக்வாண்டோ மாணவர்களுக்கு, முதல்வர் ரங்கசாமி சான்றிதழ் வழங்கினார்.
புதுச்சேரியில் தேக்வாண்டோ தற்காப்பு கலை பயிலும் மாணவர்கள், சட்டசபை அலுவலகத்தில் முதல்வர் ரங்கசாமியை நேற்று சந்தித்தனர். இந்த கலையில், மாநில அளவில் பிளாக் பெல்ட் எனும் நிலையை அடைந்த, நுாறு மாணவர்களுக்கு சான்றிதழை, முதல்வர் வழங்கினார்.
தேக்வாண்டோ சங்க தலைவர் ஸ்டாலின், பொதுச் செயலாளர் மஞ்சுநாதன், தேக்வாண்டா சர்வதேச நடுவர் பகத்சிங், சங்க நிர்வாகிகள் மற்றும் பெற்றோர் கள் கலந்து கொண்டனர்.

