/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பள்ளி மாணவர்களுக்கான திறமை தேடல் போட்டி
/
பள்ளி மாணவர்களுக்கான திறமை தேடல் போட்டி
ADDED : பிப் 02, 2026 03:25 AM

புதுச்சேரி: புதுச்சேரி அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கான திறமை தேடல் போட்டி நேற்று வாசவி பண்ணாட்டு சி.பி.எஸ்.இ., பள்ளியில் நடந்தது.
ரோட்டரி கிளப் ஆப் புதுச்சேரி காஸ்மோஸ் மற்றும் அருணா மெமோரியல் டிரஸ்ட் சார்பில் புதுச்சேரி அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கான திறமை தேடல் போட்டி நேற்று முத்தியால்பேட்டை வாசவி பண்ணாட்டு சி.பி.எஸ்.இ., பள்ளியில் நடந்தது.
விழாவை சென்னை உயர்நீதிமன்ற புதுச்சேரி அரசு வழக்கறிஞர் ராமச்சந்திர மூர்த்தி தலைமை தாங்கி துவக்கி வைத்தார். வாசவி பண்ணாட்டு பள்ளி தலைவர் வேணுகோபால், உதவி கவ ர்னர் தினேஷ்குமார், அருணா கிளினிக் லேப் தலைமை நிர்வாக அதிகாரி அழகரசன், அருணா நினைவு அறக்கட்டளை நிறுவனர் வீரமணி, சந்திரசேகரன், சுரேஷ்குமார், சிவகணபதி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பழனியப்பன், செந்தில் ராஜ், மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
இதில் 600 மாணவர்கள் கலந்து கொண்டு பேச்சி, ஓவியம், நடனம், பாட்டு என தங்கள் தனித் திறமைகளை வெளிப்படுத்தினர்.

