sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில செயற்குழு கூட்டம்

/

தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில செயற்குழு கூட்டம்


ADDED : ஜன 10, 2025 05:48 AM

Google News

ADDED : ஜன 10, 2025 05:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: தமிழ்நாடு மீனவர் பேரவையின் 16வது மாநில செயற்குழு கூட்டம், புதுச்சேரி ஆனந்தா இன் ஓட்டலில் நடந்தது.

பேரவை தலைவர் அன்பழகனார் தலைமை தாங்கினார். தேசிய மீனவர் பேரவை தலைவர் இளங்கோ முன்னிலை வகித்தார். கொள்கை பரப்பு செயலாளர் பார்த்திபன் வரவேற்றார்.

பொது செயலாளர் தாஜூதீன், செந்தில்குமார், பொருளாளர் ரகு, மகளிரணி தலைவி ஜெயந்தி, இளைஞரணி தலைவர் ரஞ்சித், துணைத் தலைவர்கள் கவுரிலிங்கம், ஜெயபால், செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், கடல் சாகச பயணம் மேற்கொண்ட ஊனமுற்ற குழந்தைகளை வரவேற்ற தேசிய மீனவர் பேரவை தலைவர் இளங்கோ, தமிழ்நாடு அரசு மீனவ நல வாரிய தலைவர் தாஜூதீன், எழுத்தாளர் ராமஜெயம், அழகேசன் ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் வாழும் பாரம்பரிய மீனவர்களை பழங்குடியினராக அங்கீகரிக்க வேண்டும். மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணமாக ரூ. 18 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில தலைவர் குணசீலன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us