/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி
/
தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி
தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி
தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி
ADDED : ஏப் 15, 2026 10:33 PM

காரைக்கால்: திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
காரைக்கால், திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் தனி சன்னதியில் சனி பகவான் அனுகிரக மூர்த்தியாக அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் நேற்று முன்தினம் தமிழ் வருடப் பிறப்பை முன்னிட்டு வாக்கிய பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் கோவில் நிர்வாகம் சார்பில், சிவாச்சார்யார்கள் பஞ்சாங்கள் வாசித்தனர். அப்போது ஒருத்தரப்பினர் பஞ்சாங்கம் வாசிக்ககூடாது என, தகராறு செய்தனர். தருமபுரம் ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீமத் சட்டநாத தம்பிரான் சுவாமிகள் மற்றும் எதிர்தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தகவல் அறிந்த திருநள்ளாறு இன்ஸ்பெக்டர் பிரவின்குமார் விரைந்து வந்து இரு தரப்பினையும் சமாதனம் செய்தார். இதனால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு நிலவியது.
பின், வழக்கம் போல் பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. இதில் திருநள்ளாறு கோவிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவம் நிகழ்ச்சி வரும் மே மாதம் 13ம் தேதி கொடியேற்ற நிகழ்ச்சி மற்றும் 27ம் தேதி தேர் திருவிழா நடைபெறுவதாக சிவாச்சார்யார் பஞ்சாங்கம் வாசித்தார்.
நிகழ்ச்சியில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீமத் சட்டநாத தம்பிரான் சுவாமிகள், கோவில் நிர்வாக அதிகாரி சுப்ரமணியன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

