ADDED : பிப் 02, 2026 02:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: கால் வலியால் அவதிப்பட்டு வந்த டீ கடை உரிமையாளர், துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விருத்தாசலம் அருகே மங்கலம்பேட்டையை சேர்ந்தவர் மோகன்பாபு, 42; டீ கடை நடத்தி வந்தார். திருமணமாகி 20 மற்றும் 18 வயதில் இரண்டு மகள்கள், 15 வயதில் மகன் உள்ளார்.
கால் வலியால் நீண்டகாலமாக அவதிப்பட்டு வந்த மோகன்பாபு, சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று முன்தினம் அதிகாலை 3:00 மணியளவில், பாத்ரூம் சென்ற அவர், நீண்ட நேரமாகியும் வரவில்லை. அவரது மனைவி உமா சென்று பார்த்தபோது, பாத்ரூமில் துாக்குபோட்டு இறந்து கிடந்தார்.
இது குறித்து உமா கொடுத்த புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

