/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கழிவறையில் தவறி விழுந்து காயமடைந்த வாலிபர் சாவு
/
கழிவறையில் தவறி விழுந்து காயமடைந்த வாலிபர் சாவு
ADDED : ஏப் 12, 2025 09:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: கழிவறையில் வழுக்கி விழுந்து படுகாயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பாகூர் அடுத்த சோரியாங்குப்பம் தெற்கு தெருவை சேர்ந்தவர் தங்கவேல், 35; கூலி தொழிலாளி, திருமணமாகவில்லை. அவரது தம்பி சங்கர் வீட்டில் வசித்து வந்தார்.
கடந்த 4ம் தேதி தங்கவேல் கழிவறைக்கு சென்ற போது, வழுக்கி விழுந்ததில் தலையில் படுகாயமடைந்தார். ஜிப்மரில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது தம்பி சங்கர் அளித்த புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

