sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ரூ.3 லட்சத்தில் கோவில் குளம் துார் வாரப்படும் : ஜான்குமார்

/

ரூ.3 லட்சத்தில் கோவில் குளம் துார் வாரப்படும் : ஜான்குமார்

ரூ.3 லட்சத்தில் கோவில் குளம் துார் வாரப்படும் : ஜான்குமார்

ரூ.3 லட்சத்தில் கோவில் குளம் துார் வாரப்படும் : ஜான்குமார்


ADDED : ஆக 14, 2025 11:51 PM

Google News

ADDED : ஆக 14, 2025 11:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: சாரம் சிவசுப்ரமணியர் கோவில் குளம் 3 லட்சம் ரூபாய் செலவில் துார்வாரப்பட உள்ளது என, அமைச்சர் ஜான்குமார் தெரிவித்தார்.

காமராஜ் நகர் தொகுதி, சாரம் சிவசுப்ரமணியர் கோவில் குளம் புதர்மண்டியுள்ளது. தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது.

இந்த கோவில் குளத்தினை துார்வாரி சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினிடம் கோரிக்கை வைத்தனர்.

கோரிக்கையை உடனடியாக ஏற்ற அவர், சிவசுப்ரமணியர் கோவில் குளத்தை துார்வாரப்படும் என, உறுதியளித்தார்.

இப்பணி அமைச்சர் ஜான்குமார் முன்னிலையில் துவங்க உள்ளது.

இது குறித்து அமைச்சர் ஜான்குமார் கூறுகையில், 'பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, சிவசுப்ரமணியர் கோவில் குளத்தை துார்வாரி தண்ணீர் தேங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அறிவுறுத்தியுள்ளார். இக்கோவில் குளம் 3 லட்சம் ரூபாய் செலவில் துார்வாரப்பட உள்ளது.

இரண்டு வாரத்திற்குள் குளம் துார் வரும் பணி முடிவடையும். இதேபோல், ரெயின்போ நகர் கிருஷ்ணா குளமும் 3 லட்சம் ரூபாய் செலவில் துார்வார ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அறிவுறுத்தலின்பேரில் துார்வாரப்பட உள்ளது' என்றார்.






      Dinamalar
      Follow us